பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
குபேரனும் உன்முன் குசேலனே; சீறும்
ரஃபேலென உன்னை ரசித்தேன்; - அபேஸ்பண்ண
வாய்ப்பளித்தால் உன்னறிவை வாகாய் லவட்டுவேன்;
போய்த்தொடேன் உன்பொருளைப் போ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக