இன்பனுக்குச் சுடலையின் இன்னுரை!
அப்பன் தயவில்நான்
ஆட்சிக்கு வந்துட்டேன்,
இப்பக் கடும்போட்டி
ஏராளம், – இப்பவேநீ
கூத்தாடி ஆனால்பின்
கோட்டை வசமாகும்,
நாத்துடுக்காப் பேசி
நடி!
இன்ப நிதியே!
எனது பெயரனே!
உன்நடிப்பால் நீயசத்து
ஊருலகைப் – பின்புனக்குச்
சிக்கலிருக் காது
சிறிதும்; மகிழ்வாரே
மக்கள் அரியணையில்
வைத்து!
எத்தனை சீமான்
எழுந்தாலும் நம்முடைய
கொத்தடிமைக் கூட்டம்
குறையாது; – புத்திவரப்
பெற்றுவிட்டால் பின்நாம்
பிழைப்ப தரிதாகும்;
கற்றுநடித் துன்திறத்தைக்
காட்டு!
உரைகவர்ச்சி ஒன்றும்
உதவாது; செல்வம்
அரைகவர்ச்சி ஆகும்
அதனால் – திரைக்கவர்ச்சி
மட்டும்தான் நம்மைப்
பதவியில் வைத்திருக்கும்
தொட்டு நடிப்பைத்
தொடர்!
ஒப்பனுக்குப் போட்டியாய்
உள்ளான் விஜய்வளர்ந்து
ஒப்பனை பூசியே
உக்கிரமாய்; – இப்பொழுது
மக்களும் ஆங்கவன்
பக்கம் விரைகின்றார்
நக்கல் அடித்து
நமை!
தாத்தன் சுடலைசொல்
தட்டாப் பெயரனாய்ப்
பூத்து நடிப்புலகில்
போந்தாயேல் – காத்துனது
பக்கம் அடிக்கும் ;
பதவி சுகம்கிடைக்கும்;
மக்கள் நடப்பார்
மதித்து!
கொத்தடிமை என்றொரு
கூட்டமுண்டு; நாமவரின்
புத்திக்குள் நன்றாய்ப்
புகுந்துள்ளோம்; – பித்துப்
பிடித்தவக் கூட்டத்தை
பின்நீயும் ஆள
நடிப்புத் துறையுதவும்
நம்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக