சனி, 9 ஆகஸ்ட், 2025

வரிமேல் வரிபோட்டவன்!

 முன்பே அதுகுரங்கு மேலும் சொறிசிரங்கு

என்றால் நமதுநிலை என்னாகும்? – இன்றளவில்

கிட்ட இருந்தாலும் கேடு; தவிர்த்துவிட்டு

எட்டியிருந் தாலும் இடர்!

 

வாயா? உடைப்பெடுத்த வாய்க்காலா? தீராத

நோயா? தொடங்கிவைக்கும் நோய்க்காலா? - ஆயாசம்

பார்க்கும் நமக்கே படபடத்துத் தான்வருதே!

பார்தாங்கு மாஇப் பயல்!?

 

ஊர்தான் மகிழாதா? ஓசோன் மகிழாதா?

மார்தட்டி வானம் மகிழாதா? – யார்யார்வாய்

வீதியிலே வந்து விழுகும் டொனால்ட்ட்ரம்ப்

பேதியிலே போகப் பெறின்!?

 

அவன்சிரிப்பும்; ஓயா அவன்பேச்சும்; தீரா

அவன்நடிப்பும் பார்த்தால், அட‍டா! – இவனையெல்லாம்

எந்தச் சிறுக்கிபெற்றாள்? என்னும் வினாவெழுது;

மந்திக்குப் பேர்தானா மன்?

 

எத்தனுக்கே எத்த‍ன்தான்; ஏமனுக்கே ஏமன்தான்;

ஜித்தன்தான்; ஆனாலும் பித்தன்தான்; – நித்தம்

வரிமேல் வரிபோட்டு வாட்டிடு வோர்க்கே

வரிமேல் வரிபோட்ட வன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக