முன்பே அதுகுரங்கு மேலும் சொறிசிரங்கு
என்றால் நமதுநிலை என்னாகும்? – இன்றளவில்
கிட்ட இருந்தாலும் கேடு; தவிர்த்துவிட்டு
எட்டியிருந் தாலும் இடர்!
வாயா? உடைப்பெடுத்த வாய்க்காலா? தீராத
நோயா? தொடங்கிவைக்கும் நோய்க்காலா? - ஆயாசம்
பார்க்கும் நமக்கே படபடத்துத் தான்வருதே!
பார்தாங்கு மாஇப் பயல்!?
ஊர்தான் மகிழாதா? ஓசோன் மகிழாதா?
மார்தட்டி வானம் மகிழாதா? – யார்யார்வாய்
வீதியிலே வந்து விழுகும் டொனால்ட்ட்ரம்ப்
பேதியிலே போகப் பெறின்!?
அவன்சிரிப்பும்; ஓயா அவன்பேச்சும்; தீரா
அவன்நடிப்பும் பார்த்தால், அடடா! – இவனையெல்லாம்
எந்தச் சிறுக்கிபெற்றாள்? என்னும்
வினாவெழுது;
மந்திக்குப் பேர்தானா மன்?
எத்தனுக்கே எத்தன்தான்; ஏமனுக்கே ஏமன்தான்;
ஜித்தன்தான்; ஆனாலும்
பித்தன்தான்; – நித்தம்
வரிமேல் வரிபோட்டு வாட்டிடு வோர்க்கே
வரிமேல் வரிபோட்ட வன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக