திராவிடம் தோற்றதால் சிந்தை கலங்கிச்
சராசரிக்கும் கீழிறங்கிச் சாடிச் –
பொறாமையை
நன்றாய் வெளிப்படுத்தும் நண்பரே!
நீர்வாழ்க
இன்றுபோல் என்றும் இனிது!
பொன்மெத்தை மீது புரண்டு படுக்காமல்
வன்மத்தைக் கக்கும் வயோதிகரே! –
உன்மத்தம்
கூடியதோ புத்தி குறைந்ததோ தோல்வியினால்
வாடியதோ தூங்கா மனம்!?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக