கொளுத்தும் வெயிலின் கொடுமையில்தப்
பிக்கக்
குளுமையைத் தேடுமென் கூடே! - குளுமைக்குத்
தோப்பிளநீர் கிட்டும் தொலைவிலில்லாக்
காரணத்தால்
சாப்பிடுவோம் தர்பூ சணி!
குளிர்சா தனப்பெட்டிக் குள்ளேஓர் ஓரம்
ஒளிந்திந்நாள் வெக்கை ஒழிப்போம்; - குளித்தாலும்
கொஞ்சமும் சூடு குறைகின்ற பாடில்லை;
தஞ்சமடை வோமிச் சணம்!
மோர்குடித்தும் பார்த்தாச்சு; முற்றும்
தயிர்சாதம்
தேர்ந்தெடுத்தும் நண்பகலில் தின்றாச்சு; - நீர்குடித்தும்
தீர்வில்லை; சூட்டால் தினம்தொல்லை; ஊத்துகிற
வேர்வையைத் தந்தோம் விலை!
காட்டில் மரம்கீழ் கயிற்றுக்கட்
டில்போட்டு
நீட்டிப் படுப்பதே நிம்மதி; - வாட்டி
எடுக்கின்ற வெய்யோன் எரிச்ச(ல்)தரா வாறு
தடுக்கவழி இல்லா ததால்!
ஓடைநீர் எங்கேனும் ஓடாதா? ஓடிப்போய்
ஆடையின்றி நாம்நீந்த ஆகாதா? – கோடைவெயில்
நுங்குக் கடங்காதா? நூல்பிடித்து
விஞ்ஞானம்
செங்கதிரைத் தீர்க்காதா தின்று!?
வேகா வெயிலேஉன் வீராப்பை விட்டுமண்ணை
நோகாமல் அன்றாடம் நோட்டமிடு – ஆகாத
வேலையைப் பார்ப்பதற்குக் காலை எழாதேபொன்
மாலைவான் ஏகுவிரை வாய்!
உச்சியிலே தொங்கும் ஒரேயோர் கதிர்பழத்தைப்
பிச்சிநான் தின்னப் பிரியமுற்றேன்; – அச்சுவெல்லத்
தூளிட்டுத் தேங்காய் துருவியிட்டுத்
தேன்தெளித்துத்
தாளித்த நெய்யுமிட்டே சற்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக