பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
அச்சனெனக் கூறிவந்தோன் ஆட்சி பறிபோக
அச்சோ வெனவிங் கழுதவர்யார்? – மெச்சும்
கலையல்ல ஈதோர் களை;நாம் வியக்க
மலையல்ல ஈதோர் மடு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக