பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
ஓட்டுக் களைவழங்கி உன்னையே தேர்ந்தெடுத்த
நாட்டுமக்கட் கேதேனும் நன்மைசெய்;கை – யூட்டில்
கவனம் செலுத்தாமல் கண்ணியமாய் ஆண்டால்
புவனமுனைப் பாடும் புகழ்ந்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக