பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
பசித்த வயிற்றுடன் பாமர மக்கள்
நசிந்து நசிந்துருகும் நாளில் - புசிக்கப்
பழச்சாறோ பாகோ பசும்பாலோ அல்ல
பழங்கஞ்சி ஆகுமென் பாட்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக