பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
பட்டோ பருத்தியோ பாலியஸ்டர் நைலானோ
கட்டி அசைந்துவரும் கன்னிகையே! – வட்டக்
கழுத்துக்குக் கீழ்பார்க்கும் காளைநான் இல்லை;
இழுத்துமறைக் காதே இனி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக