சுடலை -
லிக்கரை விற்றுக் காசை
லவட்டியும், குடிமக் கள்தம்
நிக்கரை உருவி மானம்
நிம்மதி இழக்கச் செய்தும்,
டக்கராய் வாழும் இந்த
டாடியின் தாகம் தீர்க்கச்
சக்கரை இலாக்க ருப்பஞ்
சாறுபிழிந் தீவாய் தாத்தா!
வியாபாரி -
என்னண்ணன் செட்டு நீங்க!
என்னையா தாத்தான் றீங்க?
நன்மையே செய்யா நீங்க
நாடாள ஏன்வ றீங்க?
கண்ணியமாச் சொல்றேன் எந்தன்
கடைப்பக்கம் வாரா தீங்க
புண்ணியமாப் போகும் நாடு
புலரட்டும் வீடு போங்க!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக