பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
எனது கவிதை இடுப்புக்கு வேட்டி;
தனதென் றணிகிற சட்டை; - மனதுக்கு
நாளும் இதம்தரும் நல்லதோர் உள்ளாடை;
தோளுக் கிடுகிற துண்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக