பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
முத்தான பூஞ்சிரிப்பு மோகினி என்நெஞ்சில்
பத்தா யிரம்வாலா பற்றவைத்தாள்; – நித்தநித்தம்
தீபா வளிதான்என் தேகத்தில்; காதுகளில்
பூபாளம் கேட்கும்அப் போது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக