வெள்ளி, 17 அக்டோபர், 2025

 வெண்பா!

பிள்ளை அறையினிலே
பேச்சுக் குரல்கேட்டு
வெள்ளை மனத்தப்பன்
வேர்த்தனன்; - தள்ளிநின்று
காது கொடுத்துக்
கவனம் செலுத்தினன்
ஏதுதான் பேசுகிறான்
என்று! 1
பையன் கடவுளிடம்
பையவே வேண்டினான்
ஐயனையை அப்பத்தாள்
அல்லலின்றி – வையகத்தில்
நன்றிருக்கத் தாத்தா
நலமாகப் போய்வருக
என்றிறையைக் கேட்டான்
இருந்து! 2
தன்பிள்ளை ஆண்டவனின்
தாள்கள் வணங்குதல்
நன்றென்று தந்தையும்
நம்பினான் – என்றாலும்
உள்ளுக்குள் ஏதோ
உறுத்த உறங்கினான்
நள்ளிரவும் போனது
நன்கு! 3
மாரடைப்பில் தாத்தா
மரணம் அடைந்துவிட
நீரடைந்த கண்ணொடுஊர்
நின்றிருக்க – மாரடித்துக்
காதே கிழயவப்பன்
கத்திப்பின் தேறினான்
ஏதேச்சை யாய்நிகழ்ந்த
தென்று! 4
இன்றிரவும் பிள்ளை
இறைவ னிடம்வேண்டச்
சென்றுமறைந் தப்பன்
செவிமடுத்தான்; – அன்னைதந்தை
நன்றாக வாழ்க
நமதப்பத் தாவுக்கு
நன்றியென் றானே
நலிந்து! 5
அப்பனை நன்றாக
அச்சம் பிடித்தாட்ட
இப்பொழுது தூக்கம்
இலாதொழியச் – செப்பியவாறு
அப்பத்தா செத்தொழிய
அந்தோ பரிதாபம்!
குப்பென வேர்த்தார்
குமைந்து! 6
இன்றிரவு தன்பிள்ளை
யாரைக் குறிப்பிட்டு
நன்றிசொல்வான்? என்றே
நடுங்கினான்; – சின்னவனும்
அப்பொழுது வேண்டினான்
அன்னை நலம்வாழ்க
அப்பனுக்கு நன்றியென
ஆர்ந்து! 7
மாவச்சம் தோன்ற
மருத்துவரைப் போய்ப்பார்த்தான்;
நோவெதுவும் இல்லையென்றான்
நுண்ணியனும்; – சாவச்சம்
வாட்டி வதைக்க
வருத்தத் துடனேதன்
வீட்டை அடைந்தான்
விரைந்து! 8
காலையில் வந்த
கணவன் அணைத்தழுதாள்
மாலையிட்ட மங்கை
மனமுருகி; – வேலையால்
செத்த கதைசொல்லிச்
செவ்வரிக்கண் சிந்தினளே
மொத்தமடங் கிற்றிவன்
மூச்சு! 9



மூலக்கதை!
திடீர்னு பையன் ரூம்ல ஏதோ
சவுண்டு கேக்குதுன்னு அப்பா அந்த
பக்கம் போறாரு. உள்ள பார்த்தா
பையன் கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கான்..
"அம்மா, அப்பா & பாட்டி நல்லா இருக்கணும்..தாத்தாவுக்கு நன்றி"னு.
என்னடா இவன் வித்தியாசமா
வேண்டிக்கிட்டு இருக்கான்னு அவன்
அப்பாவுக்கு ஒரு டவுட் இருந்தாலும்..
ஒரு சந்தோஷம் கடவுள் பக்தியா
இருக்குறான்னு !
"மறுநாள் காலையில தாத்தாவுக்கு மாரடைப்பு வந்து இறந்துட்டாரு "..
உடனே இதை யோசித்து பார்த்த அப்பா ஒருவேளை இது எதேச்சையா நடந்திருக்கும்னு நினைச்சுக்கிட்டாரு.
மறுநாள் நைட்டும் பையன் ரூம்ல
அதே சவுண்ட் கேட்குது !
அங்க பையன் அம்மா & அப்பா நல்லா
இருக்கணும்..பாட்டிக்கு நன்றினு
சொல்லிட்டு இருக்கான்.
மறுநாள் காலையில வரைக்கும்
வெயிட் பண்ணி பார்த்தா..
"பாட்டியும் இறந்து போய்ட்டாங்க"
அப்பாவுக்கு ஒரே பயம். இன்னைக்கு
நைட்டு இவன் என்ன சொல்ல
போறான்னு ஆர்வத்தோட பையன் ரூம்ல கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சி
நின்னுட்டு இருக்குறான்‌‌.
இப்போ பையன் " அம்மா நல்லா
இருக்கணும் & அப்பாவுக்கு நன்றினு
சொன்னதும் ..இவனுக்கு வியர்க்க
ஆரம்பிச்சிட்டது
நைட் வீட்ல சரியா தூங்க முடியாம
முழிச்சிட்டு இருக்கான்.‌. இனி இத
இப்படியே விடக்கூடாதுன்னு உடனே
டாக்டர் கிட்ட போயிட்டு உடம்பை செக் பண்ணிக்குறான்..
டாக்டரும்.. " நீங்க நல்லா தானே
இருக்கீங்க உங்களுக்கு ஒன்னும்
ஆகாதுனு" சொல்லி அனுப்புறாரு..
வீட்டுக்கு வந்ததும் பொண்டாட்டி ஓடி
வந்துட்டு நைட்டு எங்க போனீங்கனு
பயத்தோட கேட்குறா..
" ஏன்‌ என்னாச்சுனு இவன் கேட்க ? "
நம்ம தோட்டக்காரன் மர்மமா செத்து
போயிட்டான்னு சொல்லுறா...
" என்னடி சொல்றனு ? ஒரு பக்கம்
கோவம் ..இன்னொரு பக்கம் உயிர்
பிழைச்சோம்னு சந்தோஷம்

 வாழச் செலவு

மிகக்குறைவு; மற்றவர்போல்
வாழத்தான் தேவை
மலையளவு; - ஆழமாய்ச்
சிந்தித்துச் செய்வீர்
செலவு; செலவுமிகின்
வந்தவழி போகும்
வரவு!

இன்பனுக்குச் சுடலையின் இன்னுரை!

 இன்பனுக்குச் சுடலையின் இன்னுரை!

சுடலையின் கூற்று:-
அப்பன் தயவில்நான்
ஆட்சிக்கு வந்துட்டேன்,
இப்பக் கடும்போட்டி
ஏராளம், – இப்பவேநீ
கூத்தாடி ஆனால்பின்
கோட்டை வசமாகும்,
நாத்துடுக்காப் பேசி
நடி!
இன்ப நிதியே!
எனது பெயரனே!
உன்நடிப்பால் நீயசத்து
ஊருலகைப் – பின்புனக்குச்
சிக்கலிருக் காது
சிறிதும்; மகிழ்வாரே
மக்கள் அரியணையில்
வைத்து!
எத்தனை சீமான்
எழுந்தாலும் நம்முடைய
கொத்தடிமைக் கூட்டம்
குறையாது; – புத்திவரப்
பெற்றுவிட்டால் பின்நாம்
பிழைப்ப தரிதாகும்;
கற்றுநடித் துன்திறத்தைக்
காட்டு!
உரைகவர்ச்சி ஒன்றும்
உதவாது; செல்வம்
அரைகவர்ச்சி ஆகும்
அதனால் – திரைக்கவர்ச்சி
மட்டும்தான் நம்மைப்
பதவியில் வைத்திருக்கும்
தொட்டு நடிப்பைத்
தொடர்!
ஒப்பனுக்குப் போட்டியாய்
உள்ளான் விஜய்வளர்ந்து
ஒப்பனை பூசியே
உக்கிரமாய்; – இப்பொழுது
மக்களும் ஆங்கவன்
பக்கம் விரைகின்றார்
நக்கல் அடித்து
நமை!
தாத்தன் சுடலைசொல்
தட்டாப் பெயரனாய்ப்
பூத்து நடிப்புலகில்
போந்தாயேல் – காத்துனது
பக்கம் அடிக்கும் ;
பதவி சுகம்கிடைக்கும்;
மக்கள் நடப்பார்
மதித்து!
கொத்தடிமை என்றொரு
கூட்டமுண்டு; நாமவரின்
புத்திக்குள் நன்றாய்ப்
புகுந்துள்ளோம்; – பித்துப்
பிடித்தவக் கூட்டத்தை
பின்நீயும் ஆள
நடிப்புத் துறையுதவும்
நம்பு!
அகரம் அமுதன்



 மெட்டு!

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
பல்லவி -
பொம்மைமுதல்வரே! பொம்மைமுதல்வரே!
என்ன இது? - தமிழ்
வார்த்தைச் செழுமையைச் சிதைப்பதை இன்றே
நிறுத்திவிடு...
பொம்மைமுதல்வரே! பொம்மைமுதல்வரே!
என்ன இது? - தமிழ்
வார்த்தைச் செழுமையைச் சிதைப்பதை இன்றே
நிறுத்திவிடு...
மதுப்பிரியர் எனச் சொல்லுவதா
குடி காரர்களை? – திரு
மணம்கடந்த உற வென்பதுவா
கள்ளத் தொடர்புகளை?
பொம்மைமுதல்வரே! பொம்மைமுதல்வரே!
என்ன இது? - தமிழ்
வார்த்தைச் செழுமையைச் சிதைப்பதை இன்றே
நிறுத்திவிடு...
சரணம் -
பெண்பித்தன் பெண் விரும்பி
ஆன தெல்லாம் உன்னாலே...
பொன்திருடன் தேவைக் காக
எடுத்துக் கொள்வோன் என்றாயே...
சாதிக்கும் இர்ரைச் சேர்க்கும்
சாதனைகள் செய்தாயே...
கையூட்டை அன்பளிப்பாய்க்
காரணப்பேர் தந்தாயே...
நோயாளி மருத்துவ பயனராய்
ஆனதுன் அறிவினிலே...
வாயாலே வடைசுட உனக்கினி
நிகரிலை உலகினிலே...
வந்தேறி நாடாள அழகிய
தமிழது அழிழுது கிடந்து..

சின்னக்கண்ணன் அழைக்கிறான்...

 மெட்டு:-

சின்னக்கண்ணன்
அழைக்கிறான்...
பல்லவி:-
கொன்று விட்டு
நடிக்கிறான்...
கொன்று விட்டு
நடிக்கிறான்...
கூட்டத்தை தமிழ்க்
கூட்டத்தை - பெரும்
ரவுத்திரம் பழகிய
ஆட்களை ஏவி
கொன்று விட்டு
நடிக்கிறான்...
சரணம் 1:-
கண்ணீர் சிந்தாத விழிகள்
இன்று தானே
சிந்துது தானே...
கண்ணீர் சிந்தாத விழிகள்
இன்று தானே
சிந்துது தானே...
பிண அரசியல் செய்கின்ற
யோக்கியரே...
தெரியும் உண்மை புரியும்...
உங்கள் ஆட்டங்கள் பாட்டங்கள்
சீக்கிரம் முடியும்...
கொன்று விட்டு
நடிக்கிறான்...
கொன்று விட்டு
நடிக்கிறான்...
கூட்டத்தை தமிழ்க்
கூட்டத்தை - பெரும்
ரவுத்திரம் பழகிய
ஆட்களை ஏவி
கொன்று விட்டு
நடிக்கிறான்...
சரணம் 2:-
மக்கள் முன்பாகத் தோன்றி
விஜய் பேச சந்தங்கள் பாட...
மக்கள் முன்பாகத் தோன்றி
விஜய் பேச சந்தங்கள் பாட...
கரூர் பாலாஜி பேர்சொல்லும் போதினிலே...
செருப்பு பறந்து வருதே...
அந்த நெரிசலில் சனங்களும்
உயிரற்று விழுதே...
கொன்று விட்டு
நடிக்கிறான்...
கொன்று விட்டு
நடிக்கிறான்...
கூட்டத்தை தமிழ்க்
கூட்டத்தை - பெரும்
ரவுத்திரம் பழகிய
ஆட்களை ஏவி
கொன்று விட்டு
நடிக்கிறான்...




 ஒருவா சகமே உதிர்த்திட்ட போதும்

திருவா சகமே தெறித்தாய்; - அருவருப்பு
ஆட்சியைச் சோட்டால் அடித்துள்ளாய் பார்த்திபா!
மாட்சி பொருந்தியதுன் வாக்கு!

 வாரி வகிடெடுத்து

வாசப்பூச் சூடுதற்கு
ஓரிரண்டே இஞ்ச்போதும்
ஓதிமயிர்; – யாரிதுபோல்
அள்ளிமுடி பின்னி
அழகாய் அலங்கரிக்க
உள்ளார்என் அன்னையைப்போல்?
ஓது! 1
சீப்பே சிரிக்கும்படிச்
சீவமுடி யாத்தலையைப்
பூப்போல நீவிமலர்ப்
பூச்சூடிப் – பாப்பாநான்
வீதியிலே வந்தால்
விழிகள் எனைமொய்க்கும்
சேதிபல ஊர்சேரும்
சென்று! 2
குதிரைவால் கொண்டை
குமரிகளின் போட்டி
அதிலேநான் வெற்றி
அடைந்தேன்; – நதிமேலே
நாணல்போல் கூந்தல்
நனியசையும் நங்கையரும்
காணஅழ கென்றன்
கதுப்பு! 3
புல்பூத்தாற் போலேஎன்
பூனை முடிபூத்துக்
கள்வார்க்கும் பேரழகைக்
கண்டாலோ – அல்வார்த்த
காரிருள் கூந்தல்
கவிழ்ந்தே மனம்நாணும்;
ஊரிலெனைப் போல்யார்தான்
உண்டு!? 4
நாற்றை முடிதல்போல்
நான்கு முடிமுடிந்து
போற்றும் படியழகாய்ப்
பூச்சூடி – நேற்றெடுத்த
கண்ணினிய போட்டோவால்
கண்நிறைய பட்டதம்மா!
கண்ணேறு நன்றாய்க்
கழி! 5
உள்ளதை வைத்தே
உளம்மகிழக் கற்றவரைத்
தொல்லைகள் என்றும்
தொடராதே; – அள்ளி
முடியத்தான் ஆசை
முடியாது போனால்
படியத்தான் சீவப்
பழகு! 6
இல்லையெனும் பேரில்
இருப்பதைப் பேணாமல்
செல்லுவதில் என்ன
சிறப்புண்டு? – நல்மகிழ்ச்சி
தன்னை அறிவதும்
தன்னிலின்பம் தேடுவதும்
அன்றிவே றில்லை
அறி! 7



 கத்தி அழுதிரண்டு

கண்ணில்நீர் வார்ப்பவனும்,
பொத்தியழு கின்ற
பொறம்போக்கும், – சத்தியமாய்ச்
சாராய சாவுக்குத்
தாளா தழவிலையே;
ஆராய வேண்டும்
அதை! 1
நீலிக்கண் நீர்வடிக்கும்
நீசர்ஏர் ஷோஇறப்பில்
போலிக்கண் ணீரும்
பொழியலையே? – காலிகள்போல்
ஓடி ஒளிந்தவர்கள்
உத்தமர்போல் இன்றுமட்டும்
நாடியழு கின்றார்
நடித்து! 2
ஆஸ்கர் வழங்கலாம்
அன்பில் மகேஷுக்கு,
பாஸ்மார்க் கொடுக்கலாம்
பாலாஜிக்கு – ஆஸ்தான
ஆக்டர் களாகும்
அனைத்துத் தகுதிகளும்
நீக்கமற உண்டே
நிறைந்து! 3
பக்கா பிளான்போட்டு
பாவம் அரங்கேற்றிச்
சொக்கா நனையத்
துடித்தழுதால் – வக்காளி!
ஊர்நம்பும் என்றா
உளக்கணக்குப் போட்டுவிட்டீர்?
சார்!அதிலே உண்டுபா
சாங்கு! 4
கோட்டர் சரக்கின்றி
கோழிபிரி யாணியின்றிக்
கூட்டமிது போல்விஜய்க்குக்
கூடிவந்தால் – ஆட்சியை
நாளை பிடிப்பது
நாமெப் படியென்றே
ஆளைக்கொன் றுள்ளார்
அடித்து! 5
அமைதிப் படைஅமா
வாசை இருகண்ணின்
இமைதாழ்த்தி மண்பார்ப்போன்
என்பேன்; – நமையெல்லாம்
நன்றாய்ஏ மாற்றி
நடிக்கும் கரூரானை
இன்றே சிறைபடுத்து
இங்கு! 6
தள்ளுமுள்ளு ஏற்படத்
தார்மீகக் காரணம்
தில்லுமுல்லு ஸ்டாலின்
திமுகவே – மெல்லமெல்ல
ஆம்புலன்ஸை உள்ளே
அனுப்பிச் சலசலப்பை
வீம்புக்கே ஏற்படுத்த
வென்று! 7
பொழுது விடியும்முன்
போஸ்ட்மார்ட்டம் செய்ய
இழுதைஎவன் கட்டளை
இட்டான்? - கழுதைஅவன்
மூடி மறைக்க
முயல்வதெலாம் பாலாஜி
ஆடிமுடித் தானே
அதை! 8




 குஞ்சுக் குழாத்தைவைத்துக்

கோட்டையைப் பற்றவெண்ணும்
நெஞ்சுரத்தால் நேர்ந்துவிட்ட
நேர்ச்சியிது; – கிஞ்சித்தும்
ஆளத் தகுதியில்லா
ஆக்டர்விஜய் ரோடுஷோ
நீளத் தகுதியில்லை
நீக்கு! 1
கூட்ட நெரிசலுக்குள்
மாட்டி மடிந்தவர்க்காய்
நீட்டிக் கரம்பற்றி
நிற்காமல் – நாட்டைவிட்டே
ஓடுதல்போல் ஓடியுள்ளாய்;
ஓங்கோல் இனம்,மறித்தோர்
கூடுகளை வைத்தாடும்
கூத்து! 2
நடிகனை நம்பி
நடுத்தெருவில் கூடி
இடிபட்டு மூச்சை
இழக்கத் – துடிக்கின்ற
கூட்டத்தை வைத்தெந்த
கோட்டையைக் கைப்பற்ற?
நீட்டப்பா கம்பியை
நீ! 3
கட்டுப்பா டில்லாக்
கடாரிகளைக் கூட்டிவந்து
முட்டிப்பார் என்று
முழங்குவது – வெட்டிப்
பணியன்றி வேறென்ன?
பக்குவத்தை ஊட்டி
அணிதிரட்டல் தானே
அழகு!? 4
விசிலடிச்சான் குஞ்சுகளை
வீதிக் கழைத்து
நிசிவரையில் ரோடுஷோ
நீட்டி – ரசிக்கவைத்தால்
ஓட்டு விழுந்திடுமா?
உன்கைதான் ஓங்கிடுமா?
கூட்டத்தைக் கொள்கையினால்
கூட்டு! 5
யாரை எதிர்க்கின்றோம்
என்னும் அறிவின்றி
பாரைத் திரட்டிப்
பவனிவந்தால் – கோரை
பிடுங்கத்தான் ஆகும்
பெயர்கெட்டுப் போகும்
குடும்பத்தைப் பார்நடித்துக்
கொண்டு! 6



 அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிராமச்சந்திரம், ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின், உதயநிதி, விஜய் - இவர்கள் அனைவருமே கூத்தாடிகளும் கூத்தாட்ட துறையைச் சார்ந்தவர்களும்தான். ஆக அண்ணாதுறை தொடங்கி நம்மை சினிமாத்துறை ஆண்டுகொண்டிருக்கிறது.

வசனம் பேசி நடிப்பவன் கூத்தாடியெனில் வசனம் எழுதித்தந்தவன் யார்? அவனும் கூத்தோடு தொடர்புடையவன் தானே.
ஆக அண்ணாதுரை தொடங்கி இன்று ஆளும் ஸ்டாலின், உதயநிதி வரை கூத்தாடிகளே. அந்தவரிசையில் புதிதாக இணைந்திருப்பவர்தான் விஜய்...
அண்ணா துரைதொடங்கி
அன்றுமுதல் இன்றும்இம்
மண்ணைச் சினிமாதான்
ஆள்கிறது; - பின்னும்ஓர்
கூத்தாடி வந்துள்ளான்;
கூட்டமவன் பின்னாலும்
காத்தாள நிற்கிறதே
கண்டு!
திரைக்குமுன் தோன்றித்
திகைக்கவைப்போன் மட்டும்
திரைக்கலைஞன் அல்லநன்றாய்ச்
சிந்தி; – திரைக்குப்பின்
நின்றியக்கிக் காட்டுபவன்
நீள்வசனம் தீட்டுபவன்
என்றும் கலைஞனென்றே
எண்!
மணிப்பிர வாள
வசன நடையில்
அணிபிற ழாமல்
அழகாய்ப் - பணம்சேர்
படத்திற் கெழுதும்
பணிசெய் தவர்தான்
தொடக்கத்தில் அண்ணா
துரை!
படத்திற் கெழுதிப்
படந்தயா ரித்துத்
தடத்தைப் பதித்துத்
தமிழர் – இடத்தினில்
வார்த்தைத் திறத்தினால்
வந்தாண்டார் இன்னுயிர்
நீத்த கருணா
நிதி!
கோணல்வாய் ஸ்டாலினுமே
கோலிவுட் ஆக்டர்தான்
நாணல்போல் ஆடி
நடித்தவர்தான்; - காணக்
கிடைக்கும் இணையத்தில்;
கேடான ஆட்சி
கொடுக்கும் இவரும்நம்
கோன்!



 நடிப்பிற் சிறந்ததமிழ் நாடு!

பத்துத் தலைமுறைக்குப்
பஞ்சம் வராதபடிச்
சொத்துக் குவித்த
சுடலையினால் – மெத்தப்
படிப்பிற் சிறந்தவரைப்
பார்க்கவொண்ணா மேடை
நடிப்பிற் சிறந்ததமிழ் நாடு!
கூத்தாடிக் கூட்டத்தைக்
கொண்டுவந்து மேடையிலே
பூத்தாட விட்டுப்
புலகித்துச் – சோத்துக்குச்
செத்த கதையைச்
சிறப்பாய்ப் பரப்புகிறார்
கொத்தடிமைக் கூட்டத்தைக்
கொண்டு!
திராவிட மாடல்
திரைக்கவர்ச்சி மாடல்,
சுராபான மாடல்,
துடுக்காய்ப் – பிராடுத்
தனம்பண்ணும் மாடல்,
தகிடுதத்த மாடல்,
இனம்கொல்லும் மாடல்
இது!
விரும்பத் தகாத
விளம்பர மாடல்
மருட்டி வதைத்திடும்
மாடல் - திருட்டுத்
தடியரின் மாடல்
தரங்கெட்ட மாடல்
விடியாத மாடல்
விடு!
திரைக்கவர்ச்சி தன்னால்
திசைத்திருப்பி நாட்டை
அரைகுறைகள் எண்ணிடுதே
ஆள; – வரைவின்றி
முற்றும் குடியில்
முழுகடிக்கும் தன்னாட்சிக்
குற்றம் குறைமறைத்துக்
கொண்டு!



பிங்க்நிற பஸ்!

 

அம்மர்கார் சின்னவர்க்கு;
அம்மணபஸ் மக்களுக்கு;
ஜம்மெனப்போ ஓசியிலே
ஜார்ஜ்எதற்கு? – நம்பணும்நீ
நல்லா விடிஞ்சிருச்சு
நாடென்னும் பொய்களை;
இல்லாட்டி நீசங்கி
இங்கு! 01
குண்டியைக் காட்டிக்
குமரியைப் போலசையும்
வண்டியைத் தந்துள்ளார்
மக்களுக்கு – முண்டியடித்து
ஏறிப் பயணி; எருமைபோல்
வாழ்;கிடைக்கும்
மீறியெதிர்ப் பார்க்கு
மிதி! 02
ஓட்டை உடைசலுக்கு
ஓர்பேரிச் சம்பழமும்
சேட்டிடம் விற்றாலும்
தேறாதே; – கோட்டையில்
குந்தியவன் கோமாளி;
கூட்டமிது ஏமாளி;
இந்தநிலை மாறணுமே
இன்று! 03
பிங்குநிறப் பேருந்தே!
எங்களுயிர் காபந்தே!
இங்கிந் நிலையினிலும்
ஏன்வந்தே? – அங்கிளிடம்
நல்லபேர் வாங்கவா?
நாங்களெல்லாம் சாகவா?
சொல்லிவிடு என்னதானுன்
சோக்கு! 04
முண்டமாய்ப் போவதேன்?
மூலியாய்ப் போவதேன்?
தண்டமாய்ப் போவதேன்
சாலையில்? – மண்டுகளின்
ஆட்சிக்குச் சாட்சியா
ஆடையில்லாக் காட்சியா
நீட்டெழுதப் போறாயா
நீ? 05
பின்னாலே ஏறிய
பேருந்தே! இப்படியா
உன்னாலே ஓட்டை
உழவேணும்? - சொன்னாலே
பிங்குநிறப் பேருந்து
பின்குனிந்து காட்டாதா?
இங்குவெறி இம்மாம்
எதுக்கு!? 06
அசகாய சூரர்தம்
ஆட்சியில் ஒன்றும்
பிசகில்லை என்பதுவீண்
பேத்தல்; - நிசமாக
அன்றாடங் காட்சிகளின்
அல்லல் உரைப்பதெனில்
ஒன்றா? ஒருகோடி
உண்டு! 07
கேடுகெட்ட ஆட்சிக்குக்
கேட்கணுமா சாட்சிக்குப்
பீடுபெற்ற தென்பதெல்லாம்
பேச்சுக்கு; - நாடு
விடியல் பிடியில்
விளங்கான் மடியில்
முடியும் தருவாயில்
மூச்சு! 08
கடன்வளர்ந்து நாட்டின்
கழுத்தைப் பிடிக்கக்
கிடந்துமக்கள் வாழ்க்கை
கிழிய – அடம்பிடித்தோர்
நாட்டை விலைபேசும்
நாணையம் பெற்றுள்ளார்
ஆட்டையைப் போட்டூரை
ஆண்டு! 09
கொத்தடிமைக் கூட்டம்போல்
கொஞ்சமும் புத்தியில்லாப்
பத்தடிமை வாய்த்தால்நான்
பாராள்வேன்; – மத்தியில்
என்சொல்லே மேவும்;
எனதுகரம் ஓங்கும்;நான்
என்செய்வேன் கொத்தடிமைக்கு
இங்கு!? 10