செவ்வாய், 10 செப்டம்பர், 2013

திருமண வாழ்த்து! 1


2010 ல் நடந்த எனது நண்பர் இலெனின் அவர்களின் திருமணத்திற்கு நான் எழுதிய வாழ்த்து அகவல் இது!

தேறல் மொழியன்; தெளிந்தநோக் குடையான்;
மாறன் அனையன்; மலர்மென் நெஞ்சன்;
காட்சிக் கெளியன்; கட்டுடல் பேணும்
மாட்சிக் குறியோன்; மறவன்; அறிஞன்;
இராம ராசு –சரஸ்வதி ஈன
வராது வந்த மாசறு பொன்னாம்
இலெனின் என்னும் இளவல் தனக்கும்
நிலமுறு பொறையினள்; நெறிநோக் குடையாள்;
கமலம் மீதமர் கலைமகள் அனையாள்;
அமல மொழிமெல் லடியாள்; ‘செவிலித்
தாய்’க்குப் படிக்கும் தகையினள்; சீர்மிக
வாய்க்கப் பெற்ற வடிவினள்; தமிழ்மணி –
மலர்க்கொடி இணையர் மகளாம் சத்திய
கலாவெனும் கவினுறு காரிகை தனக்கும்
திருமண உறவைத் திறம்பட இயற்றி
ஒருமன தாக உவப்புடன் ஒப்பிய
ஈன்றோர் மெச்ச இணையர் இருவரும்
சான்றோர் மொழியைச் சார்ந்து நடந்து
நீக்க மறயிந் நிலத்தினில்
ஆக்க முறபல் லாண்டுகள் வாழ்கவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக