புதன், 16 ஏப்ரல், 2008

சாமந்தி!



முதலெழுத் திறத்த லாகும்;
        முதல்,கடை இனமே யாகும்;
முதல்,கடை யிரண்டெ ழுத்தை
         முடிச்சிடின் அமைதி யாகும்;
முதலற குரங்கே யாகு(ம்;)
         உயர்இரண்டா மெழுத்தி னோடே
இதன்கடை தளைகின் திங்கள்;
         இச்சொல்சா மந்தி யாமே!

அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக