புதன், 16 ஏப்ரல், 2008

தாமரை!

ஏவலே முதலெ ழுத்தாம்;
எழுத்திதில் கடைத ளைகின்
காவிய வாலி இல்லாள்;
கடையிரண் டெழுத்து மானாம்;
மேவிய இடையை நீக்கி
விரைந்து‘கால்’ தனைஒ றுத்தால்
தாவிலை நிலமாம்; அச்சொல்
தாமரை என்பேன் கண்டீர்!

அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக