ஞாயிறு, 20 ஜூன், 2010

குறளே வெண்பாவாக! (4)

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு! -குறள்-


உண்டால் உயிர்க்கும் உவப்பன்றி உள்ளியதைக்
கண்டால் களிசெய்யா கள்ளதுவே! -கண்டிடினும்
பூமனத்தில் எண்ணிடினும் பொங்கி எழுந்தாடும்
காமத்திற் தோன்றும் களிப்பு!

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக