செவ்வாய், 8 ஜூன், 2010

கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!

உடலின் பசிக்காய் உறவில் திளைத்துக்
குடலிற் கருவைக் குவித்து வளர்த்துப்
பத்துத் திங்கள் பாரம் தாங்கிப்
பெற்றபின் பெற்றது பெண்மக வெனிலோ
அள்ளிப் பாலை அளிக்காது
கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக