பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
எத்தனை கவிதை சொன்னேன்?
எழுதிய கவிதை யாவும்
எத்தனை கருத்தைத் சொன்னேன்?
இயம்பிய கருத்தை நாளும்
எத்தனை உரக்கச் சொன்னேன்?
இயன்றுநான் அன்றும் இன்றும்
எத்தனை சொன்ன போதும்
ஏற்கத்தான் நாதி இல்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக