வெள்ளி, 12 செப்டம்பர், 2025

 

Anbuvalli Thangavelan

ஏழென்று நீ சொன்னால் எப்படிப்பா நீயென்றும்

ஏழரையா யிற்றே இதைமறுத்து‌ - வாழ்வாரார்

உன்பாட்டுக் கீடாய் ஒருவர் உளரோயாம்

அன்புடைய ரானதத னால்!

 

யார்சீண்டினாரோ எதற்கிந்தச்சீற்றமோ

சீர் மிக்காய்சீற்றமிது தீர்!

 

அகரம் அமுதன்

தீண்டும் அளவிற்குத் தீரன் எவனுள்ளான்?

காண்டில் முதுகின்பின் கத்தலாம்; - தூண்டியது

வெண்பா வடிக்க விடலைப் பயல்படம்;

பண்பாய் உளமுரைத்தேன் பார்த்து!

 

ஏழா? எனக்கறிவு ஏழரையா? கண்டுரைத்த

தாயார் தமக்குத் கலைவணக்கம்; - பாழான

நாளில் படிக்கின்றேன் நான்பாடல்; நூற்றாண்டின்

நீளம் எனதுபெரும் நோக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக