ஏழென்று நீ சொன்னால் எப்படிப்பா
நீயென்றும்
ஏழரையா யிற்றே இதைமறுத்து - வாழ்வாரார்
உன்பாட்டுக் கீடாய் ஒருவர்
உளரோயாம்
அன்புடைய ரானதத னால்!
யார்சீண்டினாரோ எதற்கிந்தச்சீற்றமோ
சீர் மிக்காய்சீற்றமிது தீர்!
அகரம் அமுதன்
தீண்டும் அளவிற்குத் தீரன் எவனுள்ளான்?
காண்டில் முதுகின்பின் கத்தலாம்; - தூண்டியது
வெண்பா வடிக்க விடலைப் பயல்படம்;
பண்பாய் உளமுரைத்தேன் பார்த்து!
ஏழா? எனக்கறிவு ஏழரையா?
கண்டுரைத்த
தாயார் தமக்குத் கலைவணக்கம்; - பாழான
நாளில் படிக்கின்றேன் நான்பாடல்; நூற்றாண்டின்
நீளம் எனதுபெரும் நோக்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக