பையன் 1
மச்சான் இருடா! 
உச்சா விடணும் 
   உதவுடா!  - வச்சானா
குஞ்சாம் மணிபுடிச்சிக் 
   கூலா விடும்ஒசரம்?
என்னா பிளம்பர் 
   இவன்?
பையன் 2
எம்மாம்நே ரம்டா? 
   எனக்கு வலிக்கிதுடா!
சும்மா முதுகு 
   சுளுக்குதுடா! - அம்மாடி!
என்னா கனம்டாநீ? 
   யப்பா! பொணம்டாநீ?
சொன்னா இறங்கித் 
   தொலை!
பையன் 1
ஒத்த நிமிஷமும் 
   உள்ளம் பொறுக்காம,
கத்தி அழுது 
   கதறாம, – செத்தயிரு!
முந்தி வருகிற 
   மூத்திரம் உம்மேல
சிந்தாமப் போணும் 
   சிறிது!
பையன் 2
தண்டு வடமுடையும் 
   சத்தம்நீ கேக்கலையா?
கண்டும் பொழுதக் 
   கடத்துறியா? – அண்டாவில்
கொள்ளும் அளவுக்கா 
   கொட்டுற மூத்திரத்த?
முள்மேல்நின் னாப்போல் 
   முடி!
பையன் 1
ஆத்திரங் காட்டி 
   அதட்டுனா என்னால
மூத்திரம் போக 
   முடியுமா? – காத்துல
உம்மேலப் பட்டா 
   உசிரெடுக்க மாட்டியா?
சும்மா இருடா 
   சுமந்து!
பையன் 2
என்னச் சுமக்கயில 
   என்னென்ன பேசின?
ஒன்னுக்கு நாம்போக 
   உட்டியா? – கன்னத்தில்
ஓர்துளி பட்டதுக்கே 
   ஒப்பாரி வெச்சியே!
பார்,தெறிக்கு தெம்மேலப் 
   பட்டு!
பையன் 1
எம்மேலத் தப்பில்ல; 
   ப்ளம்பிங் சரியில்ல;
உம்மேல் குறைசொல்ல 
   ஒன்னுமில்ல; – சும்மாவே
ஒம்போ தடிதாண்டி 
   ஒன்னுக்கு நாம்விடுவோம்;
எம்ப முடியலையே 
   இங்கு!
பையன் 2
ஒன்னுக்கக் கொண்டுநாம் 
   ஓவியம் போட்டதெல்லாம்
இன்னைக்கும் நெஞ்சில் 
   இருக்குது; – அன்னைக்குச்
சாத்தான நாம்வரைய 
   சாமின்னு கும்பிட்ட
தாத்தா நினைவுவரார் 
   சற்று!
பையன் 1
விட்டு முடிக்கும்முன் 
   வீணாச் சிரிப்பேத்தித்
திட்டவும் செய்யிற 
   சிந்துதுன்னு; – முட்டிவர
மூத்தரத்தத் தானடக்க 
   என்னால் முடியாது;
ஆத்திரத்தக் கொஞ்சம் 
   அடக்கு!
பையன் 2

 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக