புதன், 3 மார்ச், 2010

ஏங்கித் தவித்தல் இயல்பு!

மடிமை புகுந்த மனிதன் வாழ்வில்
விடிவே இல்லை விளையும் துயர
மடியில் வீழ்வான் மரித்து!

தூங்கிப் பொழுதைத் தொலைத்தார் வாழ்வில்
ஓங்கு வளர்ச்சி உறுதலும் இல்லை
ஏங்கித் தவித்தல் இயல்பு!

இமையின் பொழுதும் அயரா துழைப்பார்க்
கமையும் வாழ்க்கை அழகாய் மகிழ்ச்சி
நிமையின் பொழுதும் நிலைத்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக