பையன் 1
யாரோ கொடுக்க எவரோபோய் வாங்கிவர
ஊரோடு நாம்கூடி உட்கார்ந்து – மாரோடு
வண்ணக் கொடிகுத்தி வைப்போம் வணக்கத்தை
எண்ணிச் சுதந்திரத்தை ஏற்று!
பையன் 2
என்னா சுதந்திரம்? எங்கே பறந்திடும்?
பொன்னாள் இதாலா பொறந்திடும்? – சொன்னால்கேள்
என்னிடம் உள்ளதில் இந்தஒரு சட்டைதான்
இன்னும் கிழியா திருக்கு!
பையன் 1
குண்டூசி குத்திக் குடிமுழுகிப் போகாது
கண்டஞ்சிக் கத்திக் கதறாதே; – கொண்டாடி
ஆரஞ்சு மிட்டாய்கள் அஞ்சாறு வாங்குகிற
நேரம் வரையணிவோம் நெஞ்சு!
பையன் 2
கொடியேத்தி வச்சாக் குறைந்திடுமா நம்ம
மடியேத்தி வச்ச வறுமை? – அடியாத்தி!
கொண்டாட்டம் போட்டுக் கொடிகுத்திக்
கொண்டால்நம்
திண்டாட்டம் போய்விடுமா தீர்ந்து!?
பையன் 1
நாலாப்புக் கற்றதுக்கே நல்லாத்தான்
சாடுகிற
பாலாறே ஓடுமென்ற பாவிகளை; – கோலாறே
நாட்டுக் கவங்கதான்; நாம்படிச்சு
முன்னேறி
வீட்டுக் கனுப்புவோம் வென்று!
பையன் 2
கனிம வளங்காக்கக் கஞ்சாவை நீக்க
இனிமதுவே இல்லா திருக்கத் – தனித்திரவில்
பெண்போகச் செந்தமிழன் பேராட்சி யைநிறுவிப்
பண்பாடு காப்போம் படித்து!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக