புதன், 25 பிப்ரவரி, 2026

ஓசைவாய் அன்பே உரை!

 

ஆண்:-

ராவுணவு என்ன? ரவையா?சப் பாத்தியா?

நோவுதுன்னு சொல்லியே நோன்பிருப்பா? – தேவுடா!

தோசைக்குச் சட்னியா? சூடுசெய்த சாம்பாரா?

ஓசைவாய் அன்பே! உரை! 1

 

பெண்:-

மல்லிகைப்பூ இட்லி மணக்கும்தேங் காய்ச்சட்னி

நல்லபடி செய்துதர நான்முனைந்தேன்; – மல்லிகைப்பூ

வாங்கிவந்த மாமனுக்கு வந்தருந்த வாய்ப்பிருக்குத்

தேங்கியுண்டு செவ்விதழில் தேன்! 2

 

ஆண்:-

வம்பைப்பூப் போல்கிள்ளும் வைபவமே, நீவார்க்கும்

தும்பைப்பூ இட்லி தொடுகையிலே; - கும்பிக்கும்

ஓவ்வாமை இல்லை; செரிமானச் சிக்கலில்லை;

செவ்வாழைத் தண்டே!வாய் சேர்! 3

 

பெண்:-

தோளிலென்னைத் தூக்கினால் தோசையெங்கு வார்ப்பது?

தாளிலுன்னால் மின்சாரம் தாக்குது; – வாளிகொண்டு

மோகத்தை நீயிறைக்க, மொத்த‍உடல் நானிளைக்க,

தாகம்தீர்ந் தாலும் தவிப்பு! 4

 

ஆண்:-

மணக்கின்ற பேச்சால் மனங்கவரு கின்ற

குணவதி!வா! சேர்ந்து குளிப்போம்; - உணவைக்

குடற்பசிக்குப் பின்னே கொடுக்கலாம்; முன்னே

உடற்பசிக்குத் தாராய் உனை! 5

 

பெண்:-

வாய்ப்புக் கிடைத்தால் வகையாய்ச் சுவைக்கத்தான்

பாய்க்கழைக் கின்றாய் பரவசமாய்; – வாய்க்குணவு

போடுங்கள் என்றுநான் பொங்கி வடித்தளித்தால்

நூடுல்ஸ் இடையினிலே நுங்கு! 6

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக