பக்தர்:-
ஒத்தப்பா! ஓரம் ஒதுங்கப்பா! இப்படியா
மத்தியில் நின்று வழிமறிப்பாய்? – மத்தவங்க
முந்திப்போய் சாமி முகம்காண வேண்டாமா?
நந்திபோல் நில்லாய்; நகர்!
முன்னாள் அமைச்சரெனில் மூலவர் ஓடிவந்து
தன்னாலே காட்சி தருவாரா? – பின்னால்போய்
மக்கள் வரிசையிலே வந்து தரிசனம்செய்;
அக்கப்போர் பண்ணா(து) அகல்!
சேகர் பாபு:-
வக்கத் தவனெல்லாம் வம்புக் கிழுத்திங்கு
நிக்காதே சீக்கிரம் நீங்குன்றான்; – சிக்கல்மேல்
சிக்கலைத் தாங்கி சிவனேன்னு நான்நின்றால்
நக்கலாச் சொல்றான், ‘நகர்!’
முன்னாள் அமைச்சென்றும் முன்கோபக் காரனென்றும்
சொன்னாலும் கூட சுருக்கென்று - பின்னால்
பிசாசைப்போல் வந்து பிராண்டிவிட் டென்னை
அசால்ட்டாச் சொல்றான், ‘அகல்!’

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக