செவ்வாய், 5 மே, 2009

ஈற்றடி இந்தா எழுது!

சாற்றடி நான்கிலும் சத்துள்ள நற்கருத்தை
ஏற்றடி என்பேனே என்தங்காய்! -ஆற்றடி
மாற்றடி ஏழை மனத்துயரை வெண்பாவின்
ஈற்றடி இந்தா எழுது!

குறிப்பு:-
"வெண்பாவால் ஏழை மனத்துயரை ஆற்றவும் மாற்றவும் செய்க" என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்க.


அகரம்.அமுதா

3 கருத்துகள்:

  1. //சாற்றடி நான்கிலும் சத்துள்ள நற்கருத்தை
    ஏற்றடி //

    ஆஹா மிக அருமை. உங்கள் ஈற்றடிக்கு எங்கள் முயற்சிகள் தொடர்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றிகள் தோழி உமா அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. வெண்பா எழுதிட ஆர்வம் இருக்கின்ற
    நண்பர்காள் கேளீர் இதனையும் - வெண்பாவை
    ஈற்றடிக்குத் தக்க எழுதுதல் ஓர்சுகம்
    ஈற்றடி இந்தா எழுது

    பதிலளிநீக்கு