சுடலின் -
இந்நாள் முதல்வா!என் இன்னோர் புதல்வா!ஊர்
புந்தியிலே வைத்த புதுத்தலைவா! – வந்தவுடன்
வெள்ளை அறிக்கை வெளியிடத்தான் வேண்டுமா?
தள்ளிவைப்பாய் அவ்வுத் தரவு!
விஜய் -
கஜானாவில் கொஞ்சமும் காசுபணம் இல்லை
அஜாக்கிரதை யானதுங்கள் ஆட்சி; – மஜாவாகத்
தானிருக்கும் வெள்ளறிக்கை தாக்கல்செய் தாலதற்கே
நானிருக்கேன்; நம்புதெனை நாடு!
சுடலின் -
பச்சிள கன்று பயமறியா தென்றாற்போல்
இச்சமயம் என்னை எடாவுகிறீர்; – அச்ச மயம்
ஆட்கொள்ளும் அச்சமயம் ஆர்நான் எனஅறிவீர்
நாட்களெண்ணுங் கால்தெரிவேன் நான்!
விஜய் -
பூச்சாண்டி காட்டுகிற பூமரங்கிள்! ஊழலையே
மூச்சாய் சுவாசித்து மூளைகெட்டீர்; - ஆச்சரியம்
ஆயிரம் காட்டுதற்கே ஆளவந்தேன்; காட்டஉங்கள்
வாயிருந்து வாராதோ வாழ்த்து!?


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக