திங்கள், 10 அக்டோபர், 2011

மாமன் வந்தான்!

ஆண்:- ஏற்றிய நெய்விளக் கெரிகிற வேளையில்
 காமன் வந்தான் –என்னைக்
 காண வந்தான்
பெண்:- வந்த
 காமனும் கைத்திறன் காட்டிய வேளையில்
 மாமன் வந்தான் –நடு
 சாமம் வந்தான்

ஆண்:- விடச்சொல்லிக் கேட்குது சின்னஇடை –வந்து
       தொடச்சொல்லித் தூண்டுது அன்னநடை
பெண்:- தடைசொல்லப் பார்க்குது நெஞ்சுக்குழி –முத்தம்
       இடச்சொல்லிக் கேட்குது கன்னக்குழி
(ஏற்றிய…)
பெண்:- உன்னிடம் தந்தது ஓரளவு –இன்னும்
       உள்ளது என்னிடம் ஊரளவு
ஆண்:- அத்தனை யும்எனக் குரிமையடி –மெல்ல
       அள்ளிட நாணுது இளையகொடி
(ஏற்றிய…)

2 கருத்துகள்:

  1. அருமை யான சந்த வரிகள்
    நன்றி அமுத
    வலைப் பக்கம் வாருங்கள்
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு