செவ்வாய், 23 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (5)


காற்றைக் கிழித்துக் கடிவிரைந்த தோட்டாவால்
நேற்றென் கணவர் நிலம்வீழ்ந்தார் –ஆற்றொனாத்
துன்பம் தொலையுமுன் தோள்சுமந்த என்மகனும்
இன்றுநிலம் வீழ்ந்தான் இறந்து.

அகரம் அமுதா

1 கருத்து: