புதன், 30 மே, 2012

அமுதன் குறள்! 1


              அமுதன் குறள்!

தலைவணக்கம்!

என்னைக் கவிபுனைய இங்கே பணித்திட்ட
கன்னித் தமிழ்க்குவணக் கம்.

யாக்கை* எனக்கீந்த யாய்யெந்தை* தாள்*தொழுது
நீக்கமற நின்றேன் நினைந்து.

முடிவாய் வணக்கம் மொழிந்தேன் முருகன்
அடியார்* அவர்தாள் அணைந்து*.

யாக்கைஉடல்; யாய்எனதுதாய்;  எந்தை -எனது தந்தை;  தாள்கால்;  முருகன்அடியான் -பாத்தென்றல் முருகடியான்;  அணைந்துசார்ந்து.

                                அவையடக்கம்!

கண்ணிலான் காசெண்ணும் காட்சியொக்கும் எண்ணெழுத்(து)
எண்ணிநான் பாடும் இயல்பு.

மணல்திரித்துக் காற்றுகட்ட வந்தசிறு பிள்ளைக்
குணம்பொறுப்பீர் நெஞ்சம் குளிர்ந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக