செவ்வாய், 23 மார்ச், 2010

தமிழன்னை!

போக்கிலி ஆரியக் கூட்டம்
      பூந்தமிழ் நூல்களைப் போட்டுத்
தீக்கிரை யாக்கிய போதும்
      சிதைந்திடாச் செந்தமிழ்த் தாயே!
மாக்கடல் பேரலை யோடும்
      மண்ணதிர் உற்ற பொழுதும்
தாக்குப் பிடித்துநீ வாழ்ந்து
      தழைத்தனை பார்மிசை நன்றே.

தொல்காப் பியமாய்ப் பிறந்து
      திருக்குற ளாகத் தவழ்ந்து
ஒல்காச் சிலம்பாய் வளர்ந்தாய்
      உயர்கம் பனாலே உயர்ந்தாய்
பல்காப் பியமும் பிறங்கப்
      பைந்தமி ழாகிச் சிறந்த
தொல்தமிழ் அன்னையே!வாழி!
      தூநறைச் சுவையென வாழி!

அகரம் அமுதா

1 கருத்து: