செவ்வாய், 14 ஜூலை, 2009

குறளே வெண்பாவாக! (3)

யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு! -குறள்-


முகத்தின் எதிர்நின்று முத்துப்பல் காட்டி
அகத்திற்புண் செய்வார் அறிவோ -டகமுமிலார்
யானுற் றுயிருருகி வாடும் நெடுங்காமம்
தானுறாத் தன்மையாற் சார்ந்து!

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்! -குறள்-

ஊரார் உரைப்பழி உற்ற உரமாக
நீராகி அன்னைசொல் வேர்பாய -பாராய்!
நெடிதோங்கி நின்று நிழல்விட் டரும்பிக்
கடிதோங்கிக் காய்க்குமிந் நோய்!

அகரம் அமுதா

8 கருத்துகள்:

  1. அருமை

    நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக
    நானும் எழுதுகின்றேன்

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாக எழுதுங்கள். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றிகள் ஞானசேகர் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. ஆ.ஞானசேகரன் சொன்னது…

    இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியருக்கு வாழ்த்துகள் ////////////////

    ரிப்பீட்டு ...............

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றிகள் சுரேஷ் குமார் அவர்களே

    பதிலளிநீக்கு