வியாழன், 9 ஜூலை, 2009

குறளே வெண்பாவாக! (2)

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து! -குறள்-

நோய்க்கு மருந்தென நூலொர் உரைத்ததெலாம்
ஆய்ந்துவிடின் யாவும் அடுத்தவையே! -நோய்கொடுத்தந்
நோய்க்கு மருந்தென நுண்ணணியாள் மாறுவதைத்
தோய்ந்தறிவில் இட்டுத் துணி!

தோய்ந்த -செறிந்த

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்! -குறள்-

பொய்கைவாய் பூத்துப் பொலியும் அனிச்சமும்
துய்ய நிறவன்னத் தூவியும் -செய்ய
உருமுலை மாதரார் ஒப்பில் அடிக்கு
நெருஞ்சிப் பழத்திற்கு நேர்!

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக