செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

அமுதன் குறள்! 6

செம்மை மனத்தர் சிவனார் அடிமுடியை
எம்பிக் குதிப்பதனால் எட்டு! (41)

இழந்தால் திரும்பா திளமைவிளை யாடு
குழந்தைக் குழுசேர்த்துக் கொண்டு! (42)

கிணற்றுத் தவளைபோல் தத்திக் கடல்போய்
மணல்வீடு கட்டி மகிழ்! (43)

வாலாட்டும் பல்நிறந்துப் பட்டத்தை வானேற்றி
நூலாட்டிக் கைகொட்டி நோக்கு! (44)

எம்பிக் குதித்தபடி ஏந்தஉன் கைசுற்றும்
பம்பரம் ஆடப் பழகு! (45)

குதிரைத்தாண் டாடுபுலி கிட்டிப்புள் போன்ற
முதிர்ந்த விளையாட்டுள் மூழ்கு! (46)

விடுத்த(அ)ம்பு போலே விரைந்துபின் மீளும்
சடுகு(டு)ஆட் டத்தைத் தழுவு! (47)

விட்டுக் கொடுத்து விளையாடு நன்னெஞ்சால்
தொட்டுக் கலந்தின்பம் துய்! (48)

களம்புகுந் தாட கருத்தைக் கவரும்
சிலம்பமும் வாளும் சுழற்று! (49)

ஏறு தழுவுதல் இன்தமிழர் பண்பாடாம்
சீறுமெது கண்டும் சிரி! (50)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக