வெள்ளி, 5 செப்டம்பர், 2008

சுமை தாங்கி!

அஞ்சலம் முத்துசாமி அன்னையாய் வாய்ப்பதற்கே
என்னதவம் செய்துவிட்டேன் என்றறியேன்! -கண்ணுக்
கிமையாய்க் கனிவோ டிருந்தவளைக் காத்துச்
சுமைநானே தாங்கியா வேன்!

வேலுமகன் முத்துசாமி ஏறனையார் என்தந்தைத்
தோளுக்கு நான்சுமையாய்த் தோன்றிவிட்டேன்! -நாளும்
இமைவருத்திக் காத்தவரை இன்பநலம் சூழச்
சுமைநானே தாங்கியா வேன்!

அகரம்.அமுதா

2 கருத்துகள்: