செவ்வாய், 29 ஜூலை, 2025

 

சும்மாசும் மாஎந்தன் 

   தோலுரித்துத் தொங்கவிடும்

அம்மாஅம் மாஉனக்கென் 

   ஆரத்தி – இம்மா

அரங்கத்தில் வைத்தே 

   அடிக்காமல் விட்டால்

தரத்துணிவேன் என்றன் 

   தலை!

 

வாங்காச் சுதந்திரநாள் 

   வாலிபரே! எம்நெஞ்சின்

நீங்கா நினைவலையின் 

   நேசகரே! – பூங்காஉன்

பாடல்கள்; பிள்ளைகள்நாம் 

   பார்வைப்பொன் வாண்டுகளால்

தேடத்தான் செய்கின்றோம் 

   தேன்!

 

தோப்பனே! என்னுடைய 

  தோள்வலியே! உன்னிடம்நான்

தோப்பனே; இல்லையதில் 

   தொந்தரவே; – மேய்ப்பனாய்ப்

பார்த்தனே என்நெஞ்சப் 

   பாழ்ஆட்டை; ஊள்ளாடும்

கூத்தனே! இந்தா!கை 

   கூப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக