சும்மாசும் மாஎந்தன்
தோலுரித்துத்
தொங்கவிடும்
அம்மாஅம் மாஉனக்கென்
ஆரத்தி – இம்மா
அரங்கத்தில் வைத்தே
அடிக்காமல் விட்டால்
தரத்துணிவேன் என்றன்
தலை!
வாங்காச் சுதந்திரநாள்
வாலிபரே!
எம்நெஞ்சின்
நீங்கா நினைவலையின்
நேசகரே! – பூங்காஉன்
பாடல்கள்; பிள்ளைகள்நாம்
பார்வைப்பொன் வாண்டுகளால்
தேடத்தான் செய்கின்றோம்
தேன்!
தோப்பனே! என்னுடைய
தோள்வலியே!
உன்னிடம்நான்
தோப்பனே; இல்லையதில்
தொந்தரவே; – மேய்ப்பனாய்ப்
பார்த்தனே என்நெஞ்சப்
பாழ்ஆட்டை; ஊள்ளாடும்
கூத்தனே! இந்தா!கை
கூப்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக