புதன், 16 ஜனவரி, 2013

கானா பாடல்! 2


காலாலே கோலமிடும் கன்னிப்பொண்ணே வரியா
காலமெல்லாம் நான்சொமப்பேன் காதல் நெஞ்சத் தரியா
சில்லுன்னு சிரிப்பவளே! சிக்கன சொல்லழகி!
சில்லுன்னு சிரிப்பவளே! சிக்கன சொல்லழகி!
பூவுன்னு நான்நினச்சேன் முள்ளாகக் குத்துறியே
மேயாத மானேநீ புலிமேல பாயுறியே

ஜல்லிக்கட்டு நீதானே மல்லுக்கட்ட வந்தேனே
மல்லுக்கட்ட வந்தேனே துள்ளியோடும் பூமானே
புல்லுக்கட்டப் பாத்துப்புட்டா பசுவிடுமா செந்தேனே
மிச்சசொச்சம் இல்லாம மொத்தமும் செவந்தவளே
மொத்தமும் செவந்தவளே மச்சமும் செவந்தவளே
மச்சான ஏங்கவச்சி மனசுக்குள் ரசிப்பவளே

போதுமடி பொய்வேசம் நீயேயென் சந்தோசம்
நீயேயென் சந்தோசம் அதிலென்ன சந்தேகம்
ஒன்னோட நாஞ்சேர ஒழியட்டும் பிறதோசம்
சொக்கப்பனைக் கண்ணழகி வெட்கப்பட்டு நிக்குறியே
வெக்கப்பட்டு நிக்குறியே வேல்விழியால் தைக்குறியே
சுத்தமான மனசுக்காரி என்நெனப்பில் மொய்க்குறியே

ஆறுவக சுவையிருக்கு ஆறும்உன்னில் தானிருக்கு
ஆறும்உன்னில் தானிருக்கு ஆசப்பட்ட மாமனுக்கு
ஆசதோச என்பவளே என்னடி உன்கணக்கு?
அள்ளித்தர மனமில்லாட்டிக் கிள்ளித்தரக் கூடாதா
கிள்ளித்தரக் கூடாதா கிட்டவந்தால் ஆகாதா
அனுபவம் எனக்கில்ல சொல்லித்தரக் கூடாதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக