ஞாயிறு, 2 மார்ச், 2008

அவையடக்கம்!

அவைக்கண் நிறைந்த அறிஞர் இருக்க
நவைக்கண் உறைநான் நவிலும் -கவியால்
'தலைக்கனம் உண்டெ'னச் சாற்றார்; கவைத்தாட்
கிலைதலை என்பதால் இங்கு!

பாடும் வகையறிந்து பாடுகின்ற பாவலர்கள்
நாடும் அவைமுன்னம் நான்தோன்றல் -ஓடும்
மடைநீர் குடித்து வளர்நெல் மணிகட்(கு)
இடைபுல் எழுதற்(கு) இணை!

அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக