ஞாயிறு, 2 மார்ச், 2008

தமிழ் வணக்கம்!

பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென்
பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த
மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே!
குழவி எனையெடுத்துக் கொஞ்சு!

கோடிப் புலவருள் கோமகளே! என்னைநீ
தேடிக் களைப்புறச் செய்வேனோ? –நாடியெனை
கோத்தள்ளிக் கொஞ்சக் குறிப்பொன் றுரைப்பதெனில்
பாத்தென்றல் மாணாக்கன் பார்!

அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக