வெள்ளி, 30 மே, 2008

ராதே!

தேராதே நம்காதல் தேராதே என்றுமட்டும்
தேராதே ஓர்முடிவைத் தேராதே -தேராதே
தேராதே என்பாயேல் தேராதே என்நெஞ்சம்
தேராதே ராதேரா தே!

பொருள்:-
தேராதே நம்காதல் தேராதே என்றுமட்டும் -வெற்றிபெறாது நம்இருவருக்கும் இடையில் பூத்தக் காதல் வெற்றியே பெறாது என்றே
தேராதே ஓர்முடிவைத் தேராதே -ஆராயாமல் ஒரு முடிவைத் தேர்ந்தெடுக்காதே
தேராதே தேராதே என்பாயேல் - ஆராயாமல் நம்காதல் வெற்றிபெறாது என்று சொல்வாயே யானால்
தேராதே என்நெஞ்சம் தேராதே -(அச்சொல் கேட்டால்)துன்பக்கடலில் மூழ்கிக் கிடக்கும் என்நெஞ்சம் அதிலிருந்து மீண்டுவரவும் முடியாதே! மீண்டுவரவே முடியாதே!
ராதே ராதே -ராதா! ராதா!

அகரம்.அமுதா!

2 கருத்துகள்:

  1. நான் பிறந்தது தமிழ்நாடு பெரம்பலூர்மாவட்டத்தில் உள்ள அகரம் சீகூர் என்னும் சிற்றூர். தற்பொழுது சிங்கப்பூரில் பணிபுரிகிறேன்.

    பதிலளிநீக்கு