பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
காலால் மிதித்தவனைக்
கையால் எடுக்கவைக்கும்
மேலான முள்ளதன்
மேன்மையிது; - சாலா!நீ
தாலால் மிதித்தோன்
தலையால் சுமக்கு(ம்)வரை
ஏலாதென் றெண்ணா(து)
எழு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக