வியாழன், 18 பிப்ரவரி, 2010

ஆணுக்கும் கற்பே அழகு!

பேணும் பெருங்கற்பே பெண்டிற்(கு) எழிலாகும்
ஆணுக்கும் அஃதே அழகு!

எல்லா அழகும் அழகல்ல; கற்பென்னும்
அந்த அழகே அழகு!

பொற்புடையான் என்னும் புகழினும் இன்புதரும்
கற்புடையான் என்னும் கவின்!

கற்றோரின் மிக்காராம் கற்புநெறி பேணுகிற
பொற்புடையார் என்னும் புவி!


அகரம் அமுதா

1 கருத்து: