திங்கள், 24 பிப்ரவரி, 2014

இளங்குமரனார் அருளிய வாழ்த்துமடல்!

  

திருவள்ளுவர் தவச்சாலை,
அல்லூர் 620 101,
திருச்சி மாவட்டம்,
16.03.2012

பேரன்புப் பாவலரே,

வணக்கம். வாழிய நலனே; தாங்கள் நேரில் வழங்கிய 'அமுதன் குறள்' நூலை இன்று படிக்க வாய்த்தது.

யாப்பும், அதன் கோப்பும், பொருள் சீர்த்தியும் போற்றும் பொலிவின. தங்கள் படைப்புத் திறனும் பண்பாடும் வேட்கையும் பைந்தமிழ் நலங்களாம்!

தொடர்ந்து அணிபல சூட்டத் தக்க துலக்கம், துலக்கமாகிறது அமுதன் குறளால்!

இன்ப அன்புடன்,
இரா.இளங்குமரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக