புதன், 1 ஜூலை, 2009

பெரியோர் உரைத்தவை ஓலையிலே!

திங்கள் உலவும் மாலையிலே!
. . . . .தென்றல் தவழும் சோலையிலே!
கங்குல் வடியும் காலையிலே!
. . . . .கரும்பு பிழிபடும் ஆலையிலே!

ஊர்திகள் செல்லும் சாலையிலே!
. . . . .ஊதியம் கிடைக்கும் வேலையிலே!
பேரிச்சை விளையும் பாலையிலே!
. . . . .பெரியோர் உரைத்தவை ஓலையிலே!

அகரம் அமுதா

2 கருத்துகள்: