ஞாயிறு, 12 ஜனவரி, 2014

கதிர்விடு தூது! 1

பெண்ணினைப் பெற்றவளப் பெண்ணினை முன்பெழப்
பண்ணிப் பழக்குமப் பாங்கினில்எண்ணரும்

வைகலில் வைகலும் வன்சிறைச் சேவலவ்
வைகலில் வைதிட வைகலும்வைகலில்

வையம் பயனுற வந்தொளி கூட்டுநற்
செய்ய செறிகதிர் சிந்திடும்வெய்யோய்!

மயல்*போக்கி மிஞ்சும் மடிமை* அகலத்
துயில்போக்கி மஞ்சத் துழல்வார்ஒயில்*ஊக்கிப்

பைய பொழிலாடிப் பூவிதழ் மேற்பனி
தையல் மருங்கெனத் தானொழியஉய்யும்

நிலவும் சிறுமீனும் நேர்வெண் பனியின்
நிலைகாண மொட்டும் நிறைந்தமலராகி

மன்றல்* வளம்வர வண்டாட செண்டாட
தென்றல் திரிந்திட செவ்விமிகும்*அன்றில்போல்

வண்ணச் சிறகசைத்து வான வளஏட்டில்
பண்ணின் இனிமையெனப் பாங்குடனேநண்ணி*

எழில்காட்டி நாற்றிசையும் யாரும் எவையும்
விழிப்புறத் தோன்றி விரியும்எழிற்கதிரே!

கோல்கள் அனைத்தையுங் கோலோச்சும் பேரரசே!
பால்போல் வெளிர்க்கீற்றைப் பாய்ச்சிடும் கோல்முதலே!

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக