சனி, 31 மே, 2008

துய்த்ததைச் சொன்னேன் துணிந்து!

 பாலும் கசக்கப் பழம்புளிக்க வேறெதன்
பாலும் இளநெஞ்சம் பாயாதப் -பாலுமிப்
பாலும் இடம்பெயராப் பார்வைஎன் பார்வையைப்பெண்
பாலும் பருகலுற்றாள் பார்த்து!

பெண்டகை யாட்றன் பிறங்கும் அழகையெல்லாம்
கொண்டகையாற் றொட்டுக் குதுகளித்தேன்! -கொண்டலைப்போல்
கூத்தாடும் நுன்னிடையில் கூத்தாடக் கட்டில்மேல்
பூத்தாடிற் றின்பம் புலர்ந்து!

இளநீராய் எண்ணி இளமுலைகள் பற்றி
உளமாறக் கண்டேன் உருசி -தளதளக்கும்
சிற்றிடையில் கோலோச்சச் சீக்கிரமே கூப்பிட்டுப்
பெற்றிட்டாள் இன்பம் பெரிது!

முக்கண்கள் ஈசனுக்கு மட்டும்தான் என்றுரைத்த
மக்கன்யார்? கண்டால் வசைபாடு! -மொக்காய்
இருகண் இவள்முகத் தொன்றிடையில் கண்டேன்
கருவிழி இல்லாத கண்!

உச்சிமுதல் கால்வரை நச்செனவே இச்சுவைக்க
மெச்சியென் மெய்யணைத்தாள் மெல்லிடையாள்! -அச்சச்சோ!
தைத்ததடா மெத்தைமுள்; தையல் சுகத்தின்முன்
கைத்ததடா பேரின்பம் காண்!

பொத்தானைத் தான்நீக்கப் பொங்கிவரும் மோகத்தால்
அத்தானைக் கட்டி அணைத்திட்டாள்! -பத்தானை
வேகத்தைக் காட்டி விடியும் வரையவளின்
மோகத்தைத் தீர்த்தேன் முனைந்து!

காட்டாறு போலத்தான் கட்டடங் காதாட
பாட்டாறு போல்பாவை பாடினாள்! -கேட்டபடி
மெத்தை முறிகிற வேகத்தை நான்காட்ட
தத்தை தவித்தாள் தளர்ந்து!

சந்தனத்தைப் பூசி சரிகைவெண் பட்டிட்ட
செந்தனத்தைக் காட்டிச் சிரித்திட்டாள்! -எந்திறத்தை
நான்காட்ட நாணி நயனத்தை மூடினாள்
தேன்கூட்டில் சிந்திற்றே தேன்!

பொங்கும் புதுநீரால் புல்லரித்தாள்; பூவையவள்
தங்கத் தளிர்வாயில் தேனெடுத்தேன்! -மங்கையில்லா
சொர்க்கம்வே றெங்காம்? சுகப்போழ்து வேறேதாம்?
தற்குறிகாள்! சாற்றிடுவீர் தான்!

அகரம்.அமுதா

2 கருத்துகள்:

  1. can u leave ur phone number to me???

    பதிலளிநீக்கு
  2. 90519846 -முன்னால் சிங்கப்பூருக்கான கோட் எண்ணைச் சேர்த்துக் கொள்ளவும். அதைவிடச் சிறந்தது தங்களின் எண்ணை எனக்குத் தரலாம். நீங்கள் தமிழகத்தில் இருந்தால் தங்கள் எண்ணை எனக்குத்தரலாம். நான் இங்கிருந்து தொலைபேசியில் அழைத்தால் கட்டணம் குறைவாக இருக்கும். நன்றி

    பதிலளிநீக்கு